Header Ads



நீர்கொழும்பில் 80 வீதம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன - நிமல் லான்ஸா


- Ismathul Rahuman -

நீர்கொழும்பு சுகாதார வைத்திய பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் 80 சதவீதமானவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப் பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா தெரிவித்தார்.

நீர்கொழும்பில் தடுப்பூசி ஏற்றக்கூடிய வயதெல்லையை உடயவர்கள் 102,359 பேர்கள் உள்ளனர். இதில் 82367 பேர் களுக்கு கொவிஸ்சீல்ட், சினோ பார்ம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன.

17500 பேர்கள் இரண்டாவது டோஸ் ஏற்றியுள்ளனர்.

உல்லாசப்பயண, மீனவ பிரதேசமாக பிரசித்திபெற்ற நீர்கொழும்பில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றக்கிடைத்தமை சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களின் பொருளாதாரத்திற்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும் உந்து சக்தியாக அமைந்துள்ளது எனக்கு கூறிய லான்ஸா இன்னும் சில திணங்களில் நீர்கொழும்பில் சகலருக்கும் முதலாவது டோஸை கொடுத்துமுடிக்க எதிர்பார்த்துள்ளதாக கூறினார். இதற்காக செயல்படும் சுகாதாரத் துறையினருக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

No comments

Powered by Blogger.