Header Ads



வாள், இரும்பு கம்பி, கூரிய ஆயுதங்களுடன் 6 பேர் கும்பல் அடாவடி


மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தி விட்டு கும்பல் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. 

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர். 

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

-யாழ். நிருபர் பிரதீபன்-

No comments

Powered by Blogger.