Header Ads



பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட 3 இரத்தினக் கற்கள் (வீடியோ)


விலைமதிப்பில்லாத மூன்று இரத்தினக் கற்கள், கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையிலிருந்து இலங்கை வங்கி தலைமையகத்துக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு செல்லப்பட்டன. 

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் ஆலோசனைக்கு அமைய இலங்கை வங்கி தலைமையகத்திலுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பதற்காகவே இந்த இரத்தினக் கற்கள் மூன்றும் எடுத்துச் செல்லப்பட்டன.

கொள்ளுப்பிட்டியிலுள்ள அதிகார சபையின் கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாலேயே இரத்தினங்கள், இலங்கை வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் இராஜாங்க அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய நாரஹேன்பிட்டியவிலுள்ள இராஜாங்க அமைச்சின் வளாகத்தில் அதிகாரசபை இயங்கி வருவதாகவும் அறியமுடிகிறது.

https://www.youtube.com/watch?v=W4FP1Gc050o



5 comments:

  1. இலங்கை நூதன சாலையில் தங்கவால் காணாமல் போனதுபோல் இந்த மூன்று இரத்தினக்கற்களும் அவை தானாகவே காணாமல் போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என இந்த நாட்டு மக்கள் நம்புகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.