20 கோடி இந்திய முஸ்லிம்களுக்கு ஹஜ் பெருநாள் - இந்தியா அடையவுள்ள ஆச்சரியத்தக்க நன்மைகள்
*பக்ரீத் பொருளாதாரம்*
20 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாடுவர்.
10% முஸ்லிம்கள் குறைந்தபட்சம் ரூ.5000/- மதிப்புள்ள ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள்.
*2 கோடி x ரூ.5000 = ரூ.10000 கோடி*
இந்த அளவிலான பொருளாதாரத்தால் யார் பயனடைவார்கள்...?
இவை சீன தயாரிப்புகளோ
பெருநிறுவன தயாரிப்புகளோ அல்ல,
100% தேசிய கிராமப்புற பொருளாதாரம்.
இதனால் பயன் அடைவது இந்திய விவசாயிகள் மட்டுமே...
ஒரு விவசாயி ஆண்டுக்கு சராசரியாக 10 ஆடுகளை வளர்த்தால்
*2 கோடி ÷ 10 ஆடு = 20 லட்சம் குடும்பங்கள்* வேலைவாய்ப்பு பெறும்.
எனவே பக்ரீத் பண்டிகை, 10000 கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது மற்றும் சுமார் 20 லட்சம் சிறு விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.
ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டு, குறைந்தது 20 பேர் சாப்பிடுகிறார்கள்.
*2 கோடி x 20 பேர் = 40 கோடி மக்களுக்கு* உணவு வழங்குகிறார்கள். (முஸ்லிம் ஏழைகள் மட்டும் அல்ல. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளும் பயனடைகின்றனர்)
*பக்ரித்தின் முக்கிய பொருளாதார நன்மைகள்:*
வணிகம் - ரூ.10000 கோடி
இலவச உணவு - 40 கோடி மக்கள்
வேலைவாய்ப்பு - 20 லட்சம் பேர்.
இது குறைந்தபட்ச மதிப்பீடு, உண்மையானது இரு மடங்காக இருக்கலாம்.
கால்நடைகள் மூலம் கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, அதன் வர்த்தகத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
Mohamed Meeran அவர்களின் பதிவிலிருந்து..
இதனை சிங்களத்தில் மொழி பெயர்த்து பிரசுரிக்க முடியுமா. அடுத்த வருடம் இந்தக் குர்பானி இருக்குமோ இல்லையோ தெரியாது.
ReplyDelete