Header Ads



பரிஸ் நகரில் இலங்கை, முஸ்லிம் ஒருவர் கொலை


இலங்கையைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் -   பரிஸ் நகரில் வாழ்ந்து வந்தவருமான SH மிஹ்வார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் - சுவிற்சர்லாந்து அணிகளுக்கிடையில் நேற்று (28) நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியினை, பார்த்துக் கொண்டிருந்த இவர், அங்கிருந்தவர்கள் ஏற்படுத்திய வாய் தர்க்கத்தை அடுத்து, பிரான்சில் அகதித் தஞ்சம் கோரியுள்ள, தமிழ் இளைஞர் ஒருவரினால் குத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர், சிகிச்சை பலனின்றி இன்று 29.06.2021 வபாத்தாகியுள்ளார். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்)

இவர் மர்ஹூம்களான சாஹுல் ஹமீது, ஹக்கீமா தம்பதிகளின் மகனாவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரங்கள், பின்னர் அறிவிக்கப்படும்.

மேற்குறித்த தகவல்கள் அவருடைய சகோதரர் மற்றும் பிரான்சில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் சகோதரர்களினால் Jaffna Muslim இணையத்திற்கு உறுதிப்படுத்தப்பட்டது



2 comments:

  1. inna lillahi wa inna ilaihi rajioon

    ReplyDelete
  2. Allah iwarukku Jannathul firdhous enum swarkkatthai walanguwanaha... Am eek.

    ReplyDelete

Powered by Blogger.