Header Ads



"எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், விமான நிலையத்தை ஏற்பாடு செய்துள்ளோம்"


வைத்திய நோக்கத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு சென்றிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டமொன்று எதிர்வரும் வாரத்திலிருந்து முன்னெடுக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும், இரண்டாயிரம் கட்டில்களைக் கொண்ட கொவிட் மத்திய நிலையத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின்படியே இந்திய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதுடன் அங்கு நிர்கதியாகியுள்ள இலங்கையர்களையும் அழைத்து வருகிறோம்.

இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் பணி தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று ஏனைய சுற்றுலாப் பயணிகள் குறித்தும் ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுகாதார காரணங்களுக்காக அல்லது பிற தேவைகளுக்காக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களை திருப்பி அழைத்துவர ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்தியுள்ளோம்.

அவர்கள் அடுத்த வாரம் வர முடியாது.ஒரு வாரத்திற்குப் பிறகு அவர்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நாட்டிற்கு அழைத்து வர உத்தேசித்துள்ளோம்.

எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் விமான நிலையத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

எனவே, புதிய முறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், நாங்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு அறவிவுறுத்தியுள்ளோம். இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாத் துறை தற்போது நெருக்கடியில் உள்ளது. எனவே இந்த தொற்றுநோயுடன் வாழ நாம் பழக வேண்டும்.

சுற்றுலாத் துறையில் ஈடுபடுவோருக்கு பிற வருமான ஆதாரங்களை உருவாக்க முயற்சிக்கிறோம்.

இதுபோன்ற ஒரு தருணத்தில் ஓர் அரசாங்கத்திற்குகூட சுற்றுலாத் துறையில் ஈடுபடுவோரை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஒரு பெரிய பிரச்சினை எழுகிறது. எனவே, இந்த நேரத்தில் அத்தகைய திட்டம் அவசியம்.

இந்தியா மீதான தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் இரண்டு வாரங்களில் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

அந்த மதிப்பாய்வுக்குப் பிறகு, முன்னோக்கி செல்லும் வழியில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments

Powered by Blogger.