Header Ads



பாராளுமன்றத்திற்கு ரிஷாட்டை அழைப்பதை, தடை செய்யுங்கள் - அமைச்சர் சரத் வீரசேகர


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டுள்ள  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைப்பதைத் தடை செய்யுமாறு, ​பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று -'5- பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்படும்  எந்தவொரு உறுப்பினரும் அது தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை, பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட கூடாதென்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.




No comments

Powered by Blogger.