Header Ads



இரத்த தானம் செய்ய ஒன்றிணையுமாறு நாமல் அழைப்பு - அவரும் முன்னுதாரணமாக செயற்பட்டார்


நிலவும் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இரத்த தானம் செய்வதற்கு ஒன்றிணையுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார் 

நிலவும் கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டில் நிலவும் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இரத்த தானம் செய்வதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (19)தேசிய இரத்த மையத்தில் இரத்த தானம் செய்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்த மையம் அண்மையில் அறிவித்த்து. 

அதற்கமைய  இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இளைஞர் சமூகத்தினர் மற்றும் அதற்கு தகுதியுள்ளவர்களை ஊக்குவிக்கும்  வகையில் கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று இரத்த தானம் செய்தார்.

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

கொரோனா தொற்று காரணமாக இலங்கையின் பல இடங்களில் இரத்த தான மையங்களை நிறுவுவதற்கு முடியாத நிலை  ஏற்பட்டது. அதற்கமைய இரத்த பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சும், வைத்தியர்களும் எம்மிடம் தெரிவித்தனர்.

அதற்காக எமக்கு செய்ய கூடிய  ஒரே செயல் வந்து இரத்த தானம் செய்வதாகும். நீங்கள் செய்யும் இரத்த தானத்தின் மூலம் ஒரு உயிரை காப்பாற்றும்  புண்ணிய செயலுக்கு உங்களுக்கு பங்களிப்பு செய்ய முடியும்.

இச்செயலுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய  அனைவரையும் அருகிலுள்ள நிலையத்தை தொடர்புகொண்டு நிலவும் இரத்த பற்றாக்குறையை துரிதமாக நிவர்த்தி செய்வதற்கு இரத்த தானம் செய்வதற்கு  முன்வருமாறு  நான் அழைப்பு விடுக்கிறேன்.

நாட்டில் பயணத்தடை நிலவுவதால் வேறு நாட்களை போன்று கிராம மட்டத்தில் இரத்த தான நிலையங்களை செயற்படுத்த முடியாமையினால் நமது நாட்டில் இரத்த பற்றாக்றை ஏற்பட்டுள்ளது.

அதற்கு பங்களிப்பு செய்யும் வகையில் நான் இன்று  இரத்த தானம் செய்தேன்.

கொரோனா தொற்று காரணமாக காணப்படும் பயணத்டை மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த  இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் இரத்த தானம் செய்வதற்கு பங்களிப்பு செய்து தங்களால்  இயன்ற  வகையில் தமது கடமைகளை நிறைவேற்றுமாறு அனைவருக்கும்  அழைப்பு விடுக்கின்றேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஊடக பிரிவு​​

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

2 comments:

  1. வழக்கமாக இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்களே இரத்த தானம் செய்து வந்தன. இப்போது இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்களை தடை செய்து அநியாயம் செய்து ள்ளது இந்த அரசாங்கம். அதிலும் குறிப்பாக காத்தான்குடி மக்களேஅதிகமதிகமாக முன்வந்து இரத்த தானம் செய்வார்கள். தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் கூட இரத்த பற்றாக்குறை உள்ளது. வியா.. ன் போன்ற இனவெறி அரசியல் வாதிகளுக்கு இது தெரியுமா? இன்று இலங்கையில் காத்தான்குடி காயப்பட்ட பிரதேச மாகவுள்ளது காரணம் இந்த இனவெறி அரசியல் வாதிகள் ( நன்றி கொன்ற பண்டிகள் பொறாமை பிடித்த பைத்தியக்கார நாய்கள் )

    ReplyDelete
  2. Next political episode

    ReplyDelete

Powered by Blogger.