Header Ads



நீர்கொழும்பில் 450 இராணுவத்தினர் களமிறக்கம் - கடலோரத்தை பாதுகாப்பதில் மும்முரம்


- Ismathul Rahuman -

தீபற்றி எறிந்த "எக்ஸ்பிரஸ் பேர்ல்" கப்பலிருந்த பொருட்கள் கடறகரையில் ஒதுங்கியதினால் நீர்கொழும்பு கடலோரத்தில் துகில்களும்,கழிவுகளும் சிதறிக்கிடக்கின்றன. இதனை துப்பரவு செய்யும் பனியில் இரானுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

கடலோர பாதுகாப்பு அதிகார சபையின் ஆலோசனைக்கினங்க இரானுவத்தின் 14 வது படையனியைச் சேர்ந்த 450 இரானுவ வீரர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரானுவ படைப்பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாப்பா,இடர் முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத் ரனசிங்க ஆகியோர்களும் கலந்துகொண்டனர். சேகரிக்கப்படும் கழிவுகளை பொதிசெய்து உள்ளுராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கவுள்ளன.

No comments

Powered by Blogger.