Header Ads



2 தினங்களில் 33 ஜனாஸாக்கள் அடக்கம் - மொத்தம் 331, முஸ்லிம்களிடம் கொரோனா மரணங்கள் திடீரென உயர காரணமென்ன..?


- நஜிமிலாஹி - 

இதுவரையும் 355 கொரோனா உடல்கள் மஜ்மா நகரில்" அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இதில் 331 முஸ்லிம்களின்  ஜனாஸாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில் 9 கிறிஸ்தவ மரணங்களும், 9 இந்து மரணங்களும், 4 பௌத்த மரணங்களும், 2  வெளிநாட்டவர்களின் மரணங்கள் அடங்குவதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் Jaffna Muslim தெரிவித்தார். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.05.2021) 14 கொரோனா ஜனாஸாக்களும், இன்று (31.05.2021)  19 ஜனாஸாக்களும் மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் மேலும் குறிப்பிட்டார். 

இதன்படி இன்று (31.05.2021) வரையும் 355 கொரோனா மரணங்கள் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.