நீர்கொழும்பில் கொரோனா மரணம் 10, தொற்றாளர் 250 ஆக உயர்வு
நீர்கொழும்பு பொது சுகாதார வைத்திய பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் 250 ஐ எட்டியுள்ளது. புது வருட கொத்தின் பின் 10 கொரோனா மரணங்கள் சம்பவவித்துள்ளதாக பிரதம பொது சுகாதார பரிசோதகர் குணரத்ன தெரிவித்தார்
கொரோனா தொற்றாளர்கள் நீர்கொழும்பில் பல்வேறு பீரதேசங்களிலும் இனங்காணப்பட்டுள்ள. கூடுதலானவர்கள் குரண, பிடிப்பன, கெபுன்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
மரணமானவர்கள் கடற்கரைத் தெரு, கணல் வீதி, குரண, பிடிப்பன, சாந்த ஜோசப் வீதி, அபேசிங்கபுரம், கட்டுவ, லாஸரஸ் வீதி ஆகிய பிரதேசங்களிலைச் சேர்ந்தவர்களாவர்.
அரச நிறுவனங்களில் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் நீதிமன்ற வளாகத்தில் 12 பேரும் பொலிஸ் நிலையத்தில் 6 பேர்களுக்கும் தபால் அலுவலகத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை எஸ்டாசெனிக்கா தடுப்பூசியின் இரண்டாவது "டோஸ்" ஏற்றும் நடவடிக்கையையும் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு செயல் படுத்தப்படுகின்றன.
அரச வைத்தியர்களின் கிட்டிய உறவினர்களுக்கு கடந்த இறு திணங்களாக ஏற்றப்பட்டதுடன் நேற்று 25 ம் திகதி நீர்கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு ஏற்றப்பட்டன.
Post a Comment