Header Ads



ஹரீன், மனுஷவை உடன் விசாரியுங்கள் - பொதுஜன முன்னணி Mp க்கள் 40 பேர் முறைப்பாடு


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சூத்திரதாரி குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார வெளியிட்ட கருத்துக்களை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும்படி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சுமார், 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய முறைப்பாட்டுப் பத்திரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி தொடர்பில் தம்மிடம் இருப்பதாகக் கூறும் ஆதாரங்களை, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வெளிப்படுத்த வேண்டும் என்றும், இது தேசிய பாதுகாப்புக்கு மிகவும் தேவையானது என்றும் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து அவர்கள் அறிந்திருக்கும் இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும், இதனை வைத்துக்கொண்டு ஐக்கிய மக்கள்சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் இலாபம் தேட முனைகின்றனர் எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை சஞ்ஜீவ எதிரிமன்ன, பிரமித பண்டார, திஸ்ஸ கெட்டியாராச்சி உள்ளிட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.