Header Ads



கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளராக என்னை, தெரிவுசெய்ய கட்சிதான் முடிவு செய்யும் - பைஸர் முஸ்தபா (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக முதலமைச்சர்  வேட்பாளராக என்னை தெரிவு செய்வதற்கு கட்சி தான் முடிவு செய்யும் எனவும்   எமது கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்ளவே தான் வருகை தந்துள்ளதாக  மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றங்களுக்கான முன்னாள் அமைச்சரும்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணியுமான  பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

(வீடியோ)

அம்பாறை மாவட்டத்திற்கு இன்று(8) விஜயம் செய்த அவர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள  தனியார் விடுதியில்  அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் பிரதேச  அமைப்பாளர்களை சந்தித்து  சமகால அரசியல் நிலைகள் தொடர்பாகவும் அத்துடன்    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.