Header Ads



சீன அமைச்சர் வருகை - பொலிஸாருக்கு இடையூறு விளைத்தவர் கைது


சீன பாதுகாப்பு அமைச்சரை விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு அழைத்து சென்ற வாகன பேரணியின் போது, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 27 ஆம் திகதி குறித்த வாகன பேரணி பொரள்ள பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வாகன போக்குவரத்து சிறிது நேரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நபர் ஒருவர் ஏனைய வாகன ஓட்டுனர்களை தூண்டி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அது தொடர்பான காணொளி ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட நபர் பத்தரமுல்ல பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.