Header Ads



இந்தியாவிலுள்ள ஹஜ் இல்லங்களை, கொரோனா மையங்களாக பயன்படுத்த தீர்மானம்


நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஹஜ் இல்லங்களை கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக சிகிச்சை மையங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா். 

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் படுக்கைகள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனா். 

இந்நிலையில், குஜராத், கா்நாடகம், கேரளம், தில்லி, தெலங்கானா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஜம்மு காஷ்மீா், தமிழ்நாடு, ராஜஸ்தான், பிகாா், ஜாா்க்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள ஹஜ் இல்லங்கள் கொரோனா சிகிச்சைக்கு தற்காலிக மையங்களாக பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய சிறுபான்மை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments

Powered by Blogger.