Header Ads



டுபாய், அவுஸ்திரேலியா, கட்டாரிலுள்ள 10 பேரை இலங்கைக்கு அழைத்து விசாரணை செய்வது குறித்து தீவிர அவதானம்


(எம்.எப்.எம்.பஸீர்)

முப்பது வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்ட, 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்த, உயிர்த்த ஞாயிறு தினத்தன்றான தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள்  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந் நிலையில் குறித்த தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக வெளிநாட்டில் உள்ள 10 பேரை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். 

அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு  இராச்சியம் ( டுபாய்), மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள 10 பேரை அழைத்து வரவே இவ்வாறு மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.

குறித்த 10 பேரும்   இலங்கையில் பல்வேறு அடிப்படைவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கும் விசாரணையாளர்களுக்கும் தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் அவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க இவ்வாரறு அவர்களை நடடுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்ப்ட்டு வருவதாக அறிய முடிகின்றது.

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்க்ள் வெளிநாடுகளில் கைதுச் செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த 10 பேர் குறித்த  நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தின  பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மொத்தமாக 270 இற்கும் அதிகமான  சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 200 இற்கும் அதிகமானோர் விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ள நிலையில் ஏனையோர்  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின. 

கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வ­பிட்டி - புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சீயோன் தேவா­லயம் ஆகி­ய  கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளும் கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய  ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. 

மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றது ஏப்ரல் 21 ஆம் திகதி  காலை 8.45 மணிக்கும்  9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.

அதே தினம் பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக  உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும்  சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்டு வெடிப்புச் சம்­பவம்  பதி­வா­னது. 

அதனைத் தொடர்ந்து பிற்­பகல்  2.15 மணி­ய­ளவில், குண்­டு­வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரிகளை இலக்கு வைத்து  தெமட்­ட­கொட மஹ­வில கார்டன் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால்  தாக்குதல் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - வீரகேசரி

No comments

Powered by Blogger.