Header Ads



ஈஸ்டர் தாக்குதலுக்கு சிறிசேன பொறுப்புகூற வேண்டும், சு.க. பிரிந்தாலும் நாம் பலமாக உள்ளோம்


எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சியை ஒன்றிணைத்து கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆனால் சுதந்திர கட்சியினர் தனித்து போட்டியிடுவதாக குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் தனித்து செல்வதால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் பலமான கட்சிகள் பல கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் கூட்டணியமைத்து போட்டியிட்டது. அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பின் ஊடாகவே பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொண்டது.

இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அனைத்து கூட்டணியமைத்து போட்டியிட தீர்மானித்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளமை அறிய முடிகிறது.

சுதந்திர கட்சியினர் தனித்து செல்வதால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொதுஜன பெரமுனவில் பலம் வாய்ந்த கட்சிகள் உள்ளன. அக்கட்சிகளுடன் ஒன்றிணைந்து கூட்டணியாக போட்டியிடுவோம்.

சுதந்திரக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்களுக்கும், பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவது இயல்பானதொன்று, ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விடயம். முப்படைகளின் தலைவர் என்ற ரீதியில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விடயம்.

முப்படைகளின் தலைவர் என்ற ரீதியில் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக சுதந்திர கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விடயம். முப்படைகளின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

மக்கள் குறிப்பிட்ட விடயத்தையே ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விடயம். முப்படைகளின் தலைவர் என்ற ரீதியில்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விடயம். முப்படைகளின் தலைவர் என்ற ரீதியில் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை கொண்டு கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது.

கூட்டணியில் காணப்படும் முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரம் தீர்வுகாண முடியும். பொதுஜன பெரமுன மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் அமோக வெற்றிப் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். IBC

No comments

Powered by Blogger.