Header Ads



புத்தர் சிலையை உடைத்த இந்தியர் - சாதாரணமாக கருதாது விசாரணை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை


குளியாப்பிட்டி, ரத்மலேவத்த பிரதேசத்தில் உள்ள புத்தர் சிலை ஒன்று நேற்று உடைக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்திய நாட்டு பிரஜை ஒருவரினால் இந்த புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரான இந்தியரின் மனைவி, தனது கணவர் வீட்டிற்கு வந்தது முதல் உறங்காமல் 2 மணி வரை சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுக்கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தான் தீப்பெட்டி வழங்காமையினால் கணவர் தீப்பெட்டி தேடி அந்த இடத்திற்கு சென்றிருக்கலாம் என தான் நம்புவதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் அங்கு மேலும் இரண்டு பேர் இருந்ததாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக சந்தேக நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

தனது கணவர் விசா பெற்று இலங்கையில் வாழ்வதாகவும் அவர் குடி போதைக்கு அடிமையாகியவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புத்தர் சிலை உடைக்கப்பட்டமையினால் அங்கிருந்த மக்கள் கடும் கோபத்துடன் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்துள்ளனர்.

அவ்விடத்திற்கு வந்த குளியாப்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் மக்களை சமாதானப்படுத்தி அமைதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் இந்த விடயத்தை சாதாரணமாக எண்ணாமல் விசாரணை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளுமாறும் ஏனைய சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1 comment:

  1. இந்த நாட்டில் குழப்பதை உண்டுபண்ண இந்திய உளவு தெருநாய்களின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். இது சாதாரண விடயமல்ல

    ReplyDelete

Powered by Blogger.