தவ்ஹீத் ஜமாத்துகளும், ஜமாஅதே இஸ்லாமியும் தமது பெயர்களை மாற்றி அரசியல் கட்சிகளாக வேண்டும்
ஸஹ்ரானின் முட்டாள்த்தனமான தாக்குதலால் பல முஸ்லிம்கள் கடந்த ஆட்சியில் மிக மோசமான பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்தார்கள்.
ரஹஜ்ஜுல் அக்பர் கைது செய்யப்பட போகிறார் என கடந்த ரணில், சஜித், ஹக்கீம் நாய் ஆட்சியின் போது சொல்லப்பட்ட போது, சமூகத்தின் மரியாதைக்குரிய அவரை கைது செய்யாமல் அவரை அழைத்து விசாரணை செய்து அவரது கருத்தை பதிவு செய்ய வேண்டும் என பகிரங்கமாக நாம் சொன்னோம்.
அத்தனை முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும், அரசுக்கு முட்டுக்கொடுத்தும் எவராலும் அவரது கைதை தடுக்க முடியாத பொன்னையர்களாக இருந்தனர்.
இந்த ஆட்சி மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரிப்பதால் மீண்டும் பலரையும் கைது செய்ய வேண்டிய சூழ் நிலை உள்ளது. இல்லாவிட்டால் எதிர்க்கட்சியினர் அரசு முறையாக விசாராணை செய்யவில்லை என குற்றம் சொல்வர்.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் மரியாதைக்குரியவர்களை கைது செய்யும் நடைமுறையை காட்டிக்கொடுத்தது ரணில், சஜித் ஆட்சியாகும்.
ஹஜ்ஜுல் அக்பர், நீதியின்படி குற்றமற்றவராயின் நிச்சயம் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
ஆனாலும் கடந்த ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நான் ஒரு கருத்தை பகிரங்கமாக சொல்லியிருந்தேன். அதாவது ஜமாஅதே இஸ்லாமி என்பது பாகிஸ்தானில் உள்ள அரசியல் கட்சியாகும். அதே வேளை ஆப்கானிஸ்தானில் ஆயுதம் ஏந்தி போராடும் இயக்கமாகும். பங்களாதேசில் குற்றவாளியாக பார்க்கப்படுகிறது. ஆகவே இத்தகைய வெளிநாட்டு பெயர்கள் இனி நமது நாட்டில் தேவையில்லை என கூறினேன்.
ஆகவே இலங்கையில் உள்ள ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத்துக்கள் தமது பெயரை அரசியல் பெயராக்கி தம்மை ஜனநாயக அரசியல் கட்சிகளாக பிரகடனப்படுத்தும் படியும் கடந்த ஆட்சியின் போது பகிரங்கமாக கூறினேன்.
என் கருத்தை இவர்கள் கேட்டிருந்தால் இன்று அந்த இயக்கம் பாராளுமன்றத்தில் கவுரவமாக இருந்திருக்கும்.
yes it is true. at least hereafter they should change their names, bcos most of majority community ppl doesn't understand these, mainly they don't know Arabic language, so they just misunderstand these
ReplyDeleteமுஸ்லிம் அறிஞர்கள் இதை பெயர் பற்றிய பிரச்சினையாகவா பார்க்கிறார்கள்? சிங்கள பெள்த்த அடிப்படைவாதிகள் மேற்படி பெயர்களை இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தியலின் பெயர்களாகவே பார்க்கிறார்கள்.ஈஸ்ட்டர் தாக்குதலின்போது இன்றைய அரசு பதவியில் இருந்திருந்தாலோ அல்லது சென்ற அரசாங்கத்தில் தோழர் ஹக்கீம் போன்றவர்கள் பதவியில் இல்லாதிருந்திருந்தாலோ நிலமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்ன செய்வது? சிதறிய புவியியல் இருப்பின் சுமை போதாதென்று 1980களின் பின்னர்பலப்பட்ட கருத்தியல் பிழவுகள் மக்களையும் பிழவுபடுத்தி தலைவர்களை முடமாக்கியும் விட்டதே. பாதியாவது இது கருத்தியல் சிக்கலல்லவா?
ReplyDelete