Header Ads



கொரோனா தடுப்பூசி, மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுகிறது - பரபரப்பை கிளப்பிய ஈரானிய மதகுரு


கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுவதாக ஈரானிய மதகுரு Ayatollah Abbas Tabrizian கூறியுள்ளார்.

மெசேஜிங் தளமான டெலிகிராமில் Ayatollah Abbas Tabrizian, தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். டெலிகிராமில் Tabrizian-ஐ கிட்டத்தட்ட 2,10,000 பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராமில் Tabrizian பதிவிட்டதாவது, கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் அருகில் செல்ல வேண்டாம். அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறிவிட்டார்கள் என கூறியுள்ளார்.

Tabrizian-வின் கருத்துக்கள் தடுப்பூசி மற்றும் ஓரின சேர்க்கை சமூகம் இரண்டையும் கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாக முக்கிய LGBTQ பிரச்சாரகர் Peter Tatchell கூறினார்.

சர்ச்சைக்குரிய நபரான Tabrizian, மேற்கத்திய மருத்துவம் பற்றி பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரியில், அவர் ஒரு அமெரிக்க அறிவியல் பாடப்புத்தகத்தை எரித்த வீடியோ பகிரப்பட்டது, இஸ்லாமிய மருத்துவம் அத்தகைய புத்தகங்களை பொய்யாகிவிட்டது என Tabrizian கூறினார்.

1 comment:

  1. எல்லாச்சமூகத்திலும் இவ்வாறான கிறுக்குத்தனமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய கிறுக்குகள் மார்க்கத்தைப்பாவிப்பதுதான் அருவருப்பானது.

    ReplyDelete

Powered by Blogger.