Header Ads



கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக மபாஸ் மொஹிதீன் பொறுப்பேற்றார்


கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவர் முஹமட் மஃபாஸ் மொஹிதீன் நேற்று (17) இலங்கைத் தூதரகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பல மதப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தூதரக ஊழியர்களிடையே உரையாற்றிய தூதுவர் மொஹிதீன், தேசிய நலன்கள், இலங்கையர்களின் நலன் மற்றும் இலங்கை மற்றும் கட்டார் இடையே இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு குழுவாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.