இலங்கையில் கொரோனாவால் மரணித்தவர்கள் 290 ஆக உயர்ந்தது
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கோனபொல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Post a Comment