Header Ads



நாணயத்தாள்களை பயன்படுத்திய உடன், கைகளை நன்கு கழுவுமாறு அறிவுறுத்தல்


நாணயத்தாள்களை பயன்படுத்திய உடன் கைகளை நன்கு கழுவுமாறு இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் நாணயத்தாள்களில் நீண்ட நாட்கள் வாழக் கூடும் என்பதனால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நாணயத்தாள்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டில் ஒருவர் அல்லது இருவர் மாத்திரம் நாணயத் தாள்களைப் பயன்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

நாணயத்தாள்களைப் பயன்படுத்தும் போது உரிய சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.