Header Ads



ஏன் மறுப்பறிக்கை விடவில்லை...?


சிறைச்சாலை சம்பவத்திற்கு காரணம், சிறைக்கூடத்தில் இருந்த மாத்திரைகளை கைதிகள் பாவித்தமை தான் என அரச தரப்பால்  கூறப்பட்ட விளக்கத்தை  வெறும் அண்டப்புளுகு, ஆகாசப்புழுகு என இலங்கை  உளநோயியல் நிபுணர்கள் கழகம் (Sri Lanka College of Psychiatrists)தனது மறுப்பறிக்கையில் தெரிவித்துள்ளது. 

வந்த பெஹத், அண்டர்விய்ர் கருத்தடை, கொத்து ரொட்டி கருத்தடை, டாக்டர் சாபி'ஸ் கருத்தடை என்ற பெரும் பொய்களால் முழு நாடே அல்லோல கல்லோலப்பட்டிருந்த போது இவைகள் எல்லாம் பொய்கள், வெறும் கட்டுக்கதைகள் என ஏன் இலங்கை பெண் நோயியல், மகப்பேற்று நிபுணர்கள் கழகத்தினர் (Sri Lanka College of Obstetricians and Gynecologists) அறிக்கைகள் ஏதும் விடவில்லை?

மாட்டிறிச்சி தான் புற்றுநோய் ஏற்படக் காரணம் என்று சங்கத்து வைத்திய தலைவர் சொன்ன போது, இல்லை இல்லை,  இது தவறானது. இது அடிப்படை இல்லாதது என்று ஏன் இலங்கை புற்றுநோய் நிபுணர்கள் கழகத்தினர் (Sri Lanka College of Oncologist) உண்மையை தெளிவு படுத்தி அறிக்கைகள் ஏதும் வெளியிடவில்லை?

தண்ணீரினால் கொரோனா பரவும் என்றும், இறந்த உடல்களால் கொரோனா பெருகிப் பரவும் என்றும் வெறும் வதந்தியை, ஆகாசப் புளுகை நாட்டிற்குள்ளே அறிவிலிகள் கூட்டம் அவிழ்த்து விட்ட போது, இல்லை இல்லை இவைகள் எல்லாம் பச்சைப் பொய்கள்; அப்படி எல்லாம் நடக்காது என்று ஏன் இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் கழகத்தினர் (Sri Lanka College of Microbiologist) மறுப்பறிக்கைகள் ஏதும் வெளியிடவில்லை?

இதற்கெல்லாம் விடை ஒன்றே ஒன்றுதான். யாருமே கண்டும் காணாமல் இருந்ததற்கு காரணமும் ஒன்றே ஒன்றுதான். ஏனெனில் அவைகள் எல்லாம் ஒரு இனத்தின் மீதான காழ்ப்புணர்வின் வக்கிரங்கள். அவைகளில் சிலருக்கு நிறைய அரசியல் இலாபம் பார்க்க முடியும் என்பதைத் தவிர வேறேதும் இல்லை.

நாட்டு மக்கள் தவறாக வழி நடத்தப்படக் கூடாது, விஞ்ஞானமும், மருத்துவமும் அதன் அடிப்படைகளும் பொய்ப் படுத்தப்படக் கூடாது, யாருக்கும் பக்கச் சார்பில்லாமல் உண்மையை நடு நிலையாக உண்மையாகவே எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்திருந்தால் மேற்சொன்னவைகளுக்கும் மறுப்பறிக்கைகள் வந்திருக்கும். வந்திருக்க வேண்டும்.

யார் அறிக்கை விட்டாலும், விடாவிட்டாலும் ஒன்று மட்டும் எப்போதும் நிலையானது. இயற்கை ரொம்பவும் வினோதமானது. அது காலச்சக்கரத்தை சுழற்றிக் கொண்டே இருக்கும். விதைத்த பொய்களை முளையிலே வேரோடு பிடுங்கி விடாமல் சும்மா பார்த்துக் கொண்டிருந்த பாவம் ஒரு நாள் உங்களையும் சேர்த்து சூழ்ந்துகொள்ளும். அந்த நேரத்தில் அது பிடுங்க முடியாத பெரும் களையாக மாறியிருக்கும்.

அப்போது மற்றவர்களும் உங்களைப் போலவே இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பர்.

எங்களுக்கு வந்தால் அது  இரத்தம் உங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்பதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.

உங்களுக்கும் ஒரு நாள் இரத்தம் வரும் அப்போது மற்றவர்களும் இது தக்காளி சட்னி தானே என்று சொல்லியவாறே கடந்து செல்வர்.. அப்போது டூ லேட்..

First they came for the socialists, and I did not speak out—

     Because I was not a socialist.

Then they came for the trade unionists, and I did not speak out—

     Because I was not a trade unionist.

Then they came for the Jews, and I did not speak out—

     Because I was not a Jew.

Then they came for me—and there was no one left to speak for me.

                      -Pastor Martin Niemöller

- Dr Arshad -

1 comment:

  1. What are they going to the bodies of the Mahara Prisoners?
    If they cremate with PCR positive report and if a relative file for exhumation for any accepted legal proceedings ?

    ReplyDelete

Powered by Blogger.