Header Ads



கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அனைவரினதும் உடல்களை, நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலே கையாளவேண்டும்


கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அனைவரினதும் உடல்களை சுகாதார நிபுணர்களினதும் ஆலோசனையின் அடிப்படையிலேயே கையாளவேண்டும் என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் பௌத்தமதத்தலைவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் விசேடநிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளது என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா குறிப்பிட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட குழுவினர் முன்வைத்த பரிந்துரைகளிற்கு ஏற்பவே தற்போது செயற்படுவதாக சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களையும் தற்போதைய சட்டங்களையும் பின்பற்றவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.