Header Ads



கோவில் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டதா..?


மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் கோவில் வளாகத்தில், பொலிஸார் நேற்று (18) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

யுத்தக் காலத்தில் அந்த கோவில் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நேற்று -18- மாலை வரையில் ஆயுதங்கள் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும், எந்தவிதமான ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்படவில்லை. 

No comments

Powered by Blogger.