Header Ads



பெரண்டிக்ஸ் தொடர்பில் விசாரணை செய்த 40 அதிகாரிகளுக்கு கொரோனா



கொழும்பு குற்றவியல் பிரிவின் சுமார் 40 அதிகாரிகளுக்கு தற்போதைய நிலையில் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் பெரண்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்வது குறித்து தற்போது சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

இந்த விசாரணைகளின் போது மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களிடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இன்று (06) காலை ´தெரண அருண´ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.