Header Ads



"இறுதியாக உயிரிழந்துள்ள 3 பேருக்கும் இறந்த, பின்னரே கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது"


நாட்டில் இறுதியாக இடம்பெற்ற கொரோனா மரணங்கள் தொடர்பில் தேடிக்கொண்டு இருக்க எனக்கு நேரம் இருக்கவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா விவகாரம் தொடர்பில், நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர் அசோகா அபேசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அசோகா அபேசிங்க - இலங்கையில் பதிவாகிய இறுதி மூன்று மரணங்களும், மரணம் இடம்பெற்ற பின்னரே அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுள்ள நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே வீடுகளில் உள்ளவர்களுக்கு இன்று கொரோனா வைரஸ் பரவல் உள்ளது என்பது இதன் மூலமாக வெளிப்படுகின்றது அல்லவா?

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி - அவ்வாறு இடம்பெறவில்லை. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட.

அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை வீடுகளில் சுய தனிமையில் வைத்திருக்கும் வேளைகளில் அவர்களுக்கு பி.சி.ஆர் எடுத்துப்பார்த்ததில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

அது தவிர்ந்து வேறு எவருக்கும் தொற்று இருப்பதாக இதில் உறுதியாகவில்லை என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அசோகா அபேசிங்க - இறுதியாக உயிரிழந்துள்ள மூன்று நபர்களும் இறந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

அதிலும் இறுதி இரண்டு நபர்கள் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவும் இல்லை, சாதாரண சிகிச்சை பிரிவில் இருந்தவர்களே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

சுகாதார அமைச்சர் - இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, சுகாதார பணிப்பாளர் இது குறித்து எனக்கு எதுவுமே அறிவிக்கவில்லை.

அதுமட்டுமல்ல இதையெல்லாம் தேடிக்கொண்டு இருக்க எனக்கு நேரமும் இல்லை. நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னரே இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே தேடிப்பார்த்து கூறுகின்றேன் என்றார்.

No comments

Powered by Blogger.