Header Ads



மத்திய கிழக்கிலிருந்து 2000 இலங்கையரை கப்பலில் அழைத்துவரும் கோரிக்கை நிராகரிப்பு


மத்திய கிழக்கிலிருந்து வைத்தியசாலை வசதிகளடங்கிய கப்பல் மூலமாக 2000 இலங்கையரை அழைத்து வரும் தனியார் நிறுவனம் ஒன்றின் கோரிக்கையை கொவிட்19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பணிக்குழு(NOCPCO) அதிக செலவு கருதி நிராகரித்துள்ளது.


கடந்த செப்டெம்பர் 2ஆம் திகதி, குறித்த நிறுவனம் மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை கப்பல் மூலமாக அம்பாந் தோட்டை துறைமுகத்துக்கு அழைத்து வந்த பின் தனிமைப் படுத்தல் மருத்துவ வசதிகளுடனான ஏற்பாடு குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது.


இந்த முழு நடவடிக்கைக்கும் ஒரு மாதம் எடுக்கும் என்றும் கட்டணமாக 2மில்லியன் டொலர்(ரூ.380 மில்லியன்) செலுத்துமாறும் அந்நிறுவனம் அரசாங்கத்திடம் கோரியிருந்தது.


எவ்வாறாயினும் கொவிட் 19 பணிக்குழுவின் கூட்டத்தில் 2000 இலங்கையரை இலங்கைக்கு வான் வழியாக அழைத்து வர 180 மில்லியன் ரூபாவே செலவாகும் என்று வெளிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து மேற்படி நிறுவனத்தின் முன்மொழிவை கொவிட் 19 பணிக்குழு நிராகரிக்கத் தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.