சட்டத்தரணியாக பிரமாணம் செய்து கொண்டார்
- எப்.முபாரக் -
கிண்ணியா-03 மத்திய பள்ளி வீதி, வசித்து வருகின்ற சராப்தீன் நஸீரா என்பவர் உயர் நீதிமன்றத்தின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கை அதிபர் சேவை தரமுடைய இவர் கிண்ணியா மத்திய கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றியதோடு தற்போது கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பிரதி அதிபராகவும் கடமையாற்றுகிறார்.
கிண்ணியா பிரதேசத்தில் அதிபர் சேவை தரமுடைய ஒரே ஒரு சட்டத்தரணியான
ஓய்வுபெற்ற கிராம சேவை அதிகாரியான எம்.எச். சராப்தீன் மற்றும் உம்மு ஜெமீலா ஆகியோரின் கனிஷ்ட புதல்வியும்
இவர் சமூக ஆர்வலரான ஏ.எல்.எம்.நஜாத் ஆசிரியரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment