Header Ads



பாலித தேவரப்பெரும மீது, சட்டவிரோத தேர்தல் பிரசார முறைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் பாலித தேவரப்பெரும மீது சட்டவிரோத பிரசாரம் செய்ததாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் பிரசார பணிகளில் நிறைவடைந்த அமைதி காலக் கட்டத்தில் பாலித தேவரப்பெரும சட்டவிரோதமாக தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டார் என முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட  அமைதி காலக் கட்டத்தில் சட்டவிரோத பிரசாரத்தை மேற்கொண்டதால், தேவரபெருமாவின் நடவடிக்கைகள் தேர்தல் சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளதாக தேர்தல் வன்முறை மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.