இணை அமைச்சரவை பேச்சாளராக கம்மன்பில
இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஊடகப்பேச்சாளராக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நியமிக்கப்பட்டுள்ளார்.
இணை அமைச்சரவை பேச்சாளர்களாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பதிரன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளராக ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி, ஜனாதிபதி செயலகத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
குறித்த முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முதன்முறையாக அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள அலி சப்ரி, நாமல் ராஜபக்ஸ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
Post a Comment