Header Ads



ராஜாங்கணையில் பாடசாலை, மாணவருக்கு கொரோனா


ராஜாங்கணை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 30 பேரை தனிமைப்படுத்த பிரதேச சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


குறித்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதேவேளை, வௌிநாட்டுகளில் இருந்து 66 பேர் இன்று காலை இலங்கை வந்துடைந்துள்ளனர். 


இவ்வாறு வருகை தந்த அனைவரும் முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதேவேளை, இன்றைய தினத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்த மேலும் 82 பேர் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.