Header Ads



நான் தலைமறைவாகவில்லை - ரதன தேரர்


தான் தலைமறைவாக இல்லை எனவும் எந்த பிக்குவையும் மறைத்து வைத்திருக்கவில்லை எனவும் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.


எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ளதாக தனக்கு எதிராக பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளில் கலந்துக்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


அத்துரலியே ரதன தேரர், வெதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ளதாக விமலதிஸ்ஸ தேரரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஹூணுப்பிட்டியே சந்திரசிறி தேரர், கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


இது சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்காக கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திற்கு வருமாறு அத்துரலியே ரதன தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் வரவில்லை என்பதால், ரதன தேரர் தங்கியிருக்கும் ராஜகிரியவில் உள்ள சதாம் செவன பௌத்த மடத்திற்கு அதிகாரிகள் சென்ற போது, தேரர் அங்கு இருக்கவில்லை என கூறப்பட்டது.

1 comment:

  1. பயங்கரவாதிகள் , ரவுடிகள்.முட்டாள்கள்

    ReplyDelete

Powered by Blogger.