Header Ads



ஊவா மாகாணம் முழுமையாக, பொதுஜன பெரமுன வசம்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், ஊவா மாகாணத்தில் ஸ்ரீ லங்கா  பொது ஜன பெரமுன தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. 

அம் மாகாணத்தில் உள்ள மொணராகலை, பதுளை ஆகிய இரு தேர்தல் மாவட்டங்களிலும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளையும் வெற்றி கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அவ்விரு மாவட்டங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது.

அதன்படி பதுளை மாவட்டத்தில்  3 இலட்சத்து 9 ஆயிரத்து 538 வாக்குகளையும் மொனராகலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 193 வாக்குகளையும்  ஸ்ரீ லங்கா பொது ஜன பெறமுன பெற்றுக்கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.