Header Ads



தேர்தலில் போட்டியிட என்னிடம் 12 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டது

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமானால் 12 கோடி ரூபா அவசியம் என்று கூறப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரமே தன்னிடம் இவ்வாறு பணம் கோரியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்திளாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். தொடர்ந்தும் பேசிய அவர்,

பொதுத் தேர்தலில் செலவழிப்பதற்கு என்னிடம் பணம் இல்லை என்று எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

என்னால் 10 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க கூடியதாக இருக்கும் ஆனால் மேசையில் 2 கோடி ரூபா வைத்தால்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

எதற்காக அந்த பணம் என்று தெரியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 comment:

  1. தோல்வியடைந்தவர்களும், வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டவர்களும் இப்படியெல்லாம் புலம்புவது அரசியலில் சர்வ சாதாரணம்

    ReplyDelete

Powered by Blogger.