Header Ads



கிழக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம்


- பாறுக் ஷிஹான் -

அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதற்கமைய அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகமும்   வியாழக்கிழமை(30)    டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பாரிய சிரமதானத்தை முன்னெடுத்தது.

இதன் போது இன்று காலை குறித்த பிரதேச செயலகத்தில் உள்ள திட்டமிடல் பிரிவு நிர்வாக பிரிவு சமூர்த்தி பிரிவு காணிப்பிரிவு  சமூக சேவை பெண்கள் மகளீர் அபிவிருத்தி பிரிவு கணக்கு பிரிவு கிராம அபிவிருத்தி பிரிவு மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து குறித்த சிரமதானத்தை முன்னெடுத்தனர்.

குறிப்பாக கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக உரிய பராமரிப்பின்றி காணப்பட்ட பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழலில் தேங்கி கிடந்த திண்மக்கழிவுகள் காடுமண்டிக்கிடந்த பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டு எரியூட்டப்பட்டன.

மேலும் குறித்த சிரமதான நிகழ்வானது  நாவிதன்வெளி  பிரதேச செயலாளர்  எஸ.ரங்கநாதன்  வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி  ஆர்.லதாகரன் கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர்  நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன்  சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம்    மற்றும்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்   பங்குபற்றலுடன்   சிறப்பாக நடைபெற்றது.

No comments

Powered by Blogger.