இலங்கையில் ஒரேநாளில் பெருமளவு, கொரோனா நோயாளர்கள் குணமடைவு!
இன்றையதினம் 175 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இலங்கையில் ஒரேநாளில் குணமடைந்தவர்களின் அதிகபடியாக எண்ணிக்கை இதுவாகும்.
இலங்கையில் மொத்தமாக 2805 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். இவர்களில் 2296 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
வைத்தியசாலைகளில் இன்னமும் 498 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment