முகத்துடன் கோபித்துக்கொண்டு, மூக்கை வெட்டவேண்டாம் – மகிந்த தேசப்பிரிய
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எவரேனும் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டால் அது முகத்துடன் கோபித்துக்கொண்டு மூக்கை வெட்டுவதற்கு சமமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களிடம் உள்ள எவரேனும் கொள்ளையடிக்க முடியாத சொத்து வாக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குரிமை என்பது உயிருக்கு அடுத்த இடத்தில் உள்ளது எனவும் அவர் குறிப்பபிட்டுள்ளார்.
இதன் காரணமாக எவராலும் பறிக்கமுடியாத வாக்குரிமையை இழப்பார்கள் என்றால் அது முகத்துடன் கோபித்துக்கொண்டு மூக்கை வெட்டுவதற்கு சமமானது என அவர் தெரிவித்துள்ளார்.
விருப்பத்துடன் வாக்களியுங்கள், இம்முறை தேர்தலில் வாக்களிக்கும்போது சில சுகாதர விதிமுறைகள் உள்ளன அவற்றை கடைப்பிடியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 4:135)
www.tamililquran.com