Header Ads



பொத்துவில், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை -


திகாமடுல்ல மாவட்டத்தில் கடுமையான தேர்தல் பிரச்சாரம் இடம்பெறலாம் என தெரிவித்துள்ள கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மூன்று இடங்களில் வன்முறைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

பொத்துவில் சாய்ந்தமருது அக்கரைப்பற்று ஆகியன வன்முறைகளுக்கான ஆபத்து நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன என கபே தெரிவித்துள்ளது.

 இந்த பகுதிகளில ஏற்கனவே பல வன்முறைச்சம்பவங்களும், தேர்தல் பிரச்சாரங்களில் குரோத பேச்சுக்களும் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கபே தெரிவித்துள்ளது.

இந்த முறை தேர்தலில் சொத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்ட முதல் சம்பவம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றது என தெரிவித்துள்ள கபே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரின் வாகனம் கல்வீச்சுக்கு இலக்கானது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பகுதிகளில் பதட்டமான சூழல் உருவாகலாம் என தெரிவித்துள்ள கபே அமைப்பு பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.