சாரதி அனுமதிப்பத்திரம் - மேலும் 3 மாதங்கள் சலுகை நீடிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவிவிடும் என்ற அச்சத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தேவையற்ற நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (13) மாத்திரம் சுமார் 3500 பேர் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு அங்கு வந்திருந்தாக குறித்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காலவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்களுக்கு மேலும் 3 மாதங்கள் சலுகை காலம் வழங்க போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2020 இலக்கம் 06இன் கீழான மோட்டார் வாகன அறிவித்தலின்படி, 2020.03.16 முதல் 2020.06.30 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு 06 மாதங்கள் சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2020.07.01 முதல் 2020.09.30 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு 03 மாதங்கள் சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment