Header Ads



மரண வீடுகளில் கெரம், சதுரங்கம், புகைத்தல், வெற்றிலை போடுதல் முற்றாக தடை

மரணங்கள் நிகழ்ந்த வீடுகளில் கெரம், சதுரங்கம் மற்றும் அட்டை விளையாட்டுக்களை தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான சுகாதார பாதுகாப்பு வழிக்காட்டலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை கூடிய விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் அல்லது தகனம் செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரணங்கள் நிகழ்ந்த வீடுகளில் மதுபானம், புகைத்தல், வெற்றிலை போடுதல் என்பற முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. மரண வீடுகளுக்கு வருபவர்களுக்கு பானங்களை வழங்க வேண்டுமாயின் சூடான பானத்தை ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் பாத்திரத்தில் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.