Header Ads



படகுச் சவாரி செய்தவர் பலி

பொலன்னறுவை, அலுத்வெவ நீர்த்தேக்கத்தில் படகுச் சவாரி செய்வதற்காக சென்ற ஒருவர், படகிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (12) பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நீர்த்தேக்கத்தில் படகுச் சவாரி செய்வதற்காக சிலர் சென்றிருந்த நிலையில், அதிலொருவர் இவ்வாறு தவறி வீழ்ந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தவறி வீழ்ந்தவர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை, வீரபெதேச பிரதேசத்தைச்  சேர்ந்த  55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.