Header Ads



தேர்தல் சட்டவிதிகளால் செல்வந்தர்கள், மட்டுமே நாடாளுமன்றம் செல்ல முடியும் - அஜித் பீ. பெரேரா

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழு விதித்துள்ள புதிய சட்டவிதிகள் மிகவும் அநீதியானது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய சட்டத்திட்டத்திற்கு அமைய செல்வந்தர்கள், பலமிக்கவர்கள், கோடீஸ்வரர்கள் மாத்திரமே நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும்.

தேர்தல் சட்டம் தற்போது எப்படி இருக்கின்றது. தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களில் தேர்தல் பிரசார விளம்பரங்களை வெளியிட தடையில்லை. கிராமத்தில் உள்ள அலுவலகங்களில் கட் அவுட்களை வைக்க அனுமதியில்லை. அவற்றை அப்புறப்படுத்துகின்றனர். எனினும், தொலைக்காட்சி, வானொலிகளில் விளம்பரம் செய்யலாம்.

அப்படியானால், செல்வந்த, பலமிக்க , கோடீஸ்வரர்களுக்கே நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சஜித் பிரேமதாசவின் கட்அவுட்டை அப்புறப்படுத்துமாறு தேர்தல் அதிகாரிகள் நேற்று அறிவித்திருந்தனர்.

இதற்காக தேர்தல் அதிகாரிகள் அங்கு சென்றிருந்த போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அஜித் பீ. பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.