அரசு வழங்கிய நிவாரணங்களை, வங்கிகள் மக்களுக்கு வழங்கவில்லை - ஜனாதிபதி குற்றச்சாட்டு
வர்த்தகத்திற்காகவும் ஏற்றுமதித் துறையை சர்வதேச மக்களின் நலன் பேணலுக்காகவும் அரசாங்கம் வழங்கும் நிவாரணம் வங்கிக ளின் மூலம் சமூகத்தை முழுமை யாக சென்றடைவதில்லை என தெரிய வருகிறது. அது உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையாகும். ஏற்றுமதி துறையின் பிரச்சினைகள் மற்றும் தடைகளை சரியாக இனம்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது' என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
மிகவும் சிறியளவில் உள்ள சந்தையை இலக்காகக் கொண்டு விரிந்தளவில் எடுத்துச் சென்று நல்ல பெறுபேறுகளை கொண்டுவருவது ஏற்றுமதியாளர்களின் முன் உள்ள சவாலாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
Post a Comment