Header Ads



நேற்று சனிக்கிழமை கொரோனா நோயாளர்கள் எவரும் இனம் காணப்படவில்லை

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று நோயாளர்கள் இலங்கையில் நேற்று (20) இனம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இலங்கையில் இன்று வரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று நோயாளர்கள் 1950 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 1472 பேர் குணப்படுத்தப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மேலும் தற்போது 467 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 11 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.