ஓட்டமாவடியில் பள்ளிவாசல்கள் சிரமதானம்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்களை துப்புரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டிலுள்ள சகல மதஸ்தலங்களை நிபந்தனைகளோடு அரசாங்கம் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால் மூடப்பட்டுக் கிடந்த பள்ளிவாசல்களை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்களை அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இன்று (11) சிரமதானம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment