Header Ads



முன்னுரிமை அடிப்படையிலான வேலைத்திட்டங்களை மட்டுமே முன்னெடுக்குமாறு கோரிக்கை

முன்னுரிமை அடிப்படையிலான வேலைத்திட்டங்களை மட்டுமே முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திரைச்சேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இதன்படி, ஆகஸ்ட் மாதம் இறுதி வரையில் இந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“குறித்த விடயம் தொடர்பில் அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களை நிறைவு செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தேவையான நிதியொதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

செலவுகளை செய்யும் போது நிறைவு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கி முடிக்கப்பட வேண்டும்.

அத்துடன், அரச நிறுவனங்களுக்காக புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் செயற்பாடுகளை ஒத்திவைக்க வேண்டும்.

இதனிடையே முன்னுரிமை அளிக்கப்படாத திட்டங்களுக்கான சகல செலவுகளையும் நீக்கிவிட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக திரைச்சேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.