ஒவ்வொரு தேர்தல் வாக்களிப்பு சாவடிக்கும் பிராந்திய சுகாதார அதிகாரி
பொதுத்தேர்தலின்போது ஒவ்வொரு தேர்தல் வாக்களிப்பு சாவடிக்கும் பிராந்திய சுகாதார அதிகாரி ஒருவரை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நோக்கத்தின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைய இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுகாதார நடைமுறைகளின் மத்தியில் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் பரீட்சாத்த வாக்களிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இன்றும் பல இடங்களில் பரீட்சாத்த தேர்தல் வாக்களிப்புகள் நடத்தப்பட்டன.
Post a Comment