சவூதி அரேபியாவில் கொரோனாவுக்கு இலங்கையர் மரணம்
கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையரொருவர் சவூதி அரேபியாவில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை மரணமாகியுள்ளார்.
கல்முனை பிரதேசத்தினைச் சேர்ந்த 52 வயதான மீராசாஹிப் அப்துல் ரசீத் என்பவரே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமாகியுள்ளார்.
சவூதி அரேபியாவில் சாரதியாக பணியாற்றும் இவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 21 நாட்களாக ஜித்தாவிலுள்ள சுலைமான் பகி எனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
innalillahiwainnailaihirojiun
ReplyDeleteinnalillahiwainnailaihirojiun
ReplyDelete